தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உயிரிழப்பு

கொரோனா தொற்றினால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உயிரிழப்பு

by Staff Writer 10-06-2020 | 11:04 AM
Colombo (News 1st) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் J. அன்பழகன், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர், கடந்த 2 ஆம் திகதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 8 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வந்த அவருக்கு செயற்கைச் சுவாசக் கருவியினூடாக ஒக்ஸிஜின் செலுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (10) காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர், 2001, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது.