உரம் சார் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை

உரம் சார் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 10-06-2020 | 9:02 AM
Colombo (News 1st) உர விநியோகம் மற்றும் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். விவசாயச் செய்கை ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நீண்டகாலமாக உரம் சார்ந்த பிரச்சினைகள் எழுவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இந்த பிரச்சினைக்கு குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால தீர்வினை காண வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.