கடற்படையினர் மீது தாக்குதல்: நால்வர் கைது

அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: நால்வர் கைது

by Bella Dalima 10-06-2020 | 5:12 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்படையினர் இருவர் நேற்று (09) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு குழுவினர் கடற்படையினர் இருவர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படை உறுப்பினர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தினையடுத்து அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்த பிரதேசத்தினை சேர்ந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.