அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் சமயத் தலங்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

by Bella Dalima 10-06-2020 | 5:25 PM
Colombo (News 1st) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை பிரிவினால் சமயத் தலங்களுக்கு இன்று சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் M.I.M.ரிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை பிரிவினால் கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் ஆகியவற்றுக்கான சுகாதார உபணகரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைக்குத் தேவையான சுகாதார உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. COVID-19 வைரஸ் தாக்கத்தினால் வணக்கஸ்தலங்களில் மக்கள் கூடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார வழிமுறைகளின் கீழ் வணக்கஸ்தலங்களை விரைவில் மீள மக்களுக்காக திறப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.