கொரோனா: இன்று 57 பேர் குணமடைந்தனர்

கொரோனா: இன்று 57 பேர் குணமடைந்தனர்; தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1857 ஆக அதிகரிப்பு

by Staff Writer 09-06-2020 | 8:07 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 57 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்குள்ளான 789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1857 ஆக அதிகரித்துள்ளது.