அத்துருகிரியவில் 24 மணி நேர நீர்வெட்டு

அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 09-06-2020 | 7:02 AM
Colombo (News 1st) அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துருகிரிய, மிலேனியம்சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (09) காலை 8 மணி முதல் நாளை (10) காலை 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.