ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க ஒன்றுகூடல் இடைநடுவே நிறுத்தப்பட்டது

by Fazlullah Mubarak 08-06-2020 | 11:47 AM

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம், உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.