The Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று

The Finance நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று முதல்

by Staff Writer 07-06-2020 | 9:15 AM
Colombo (News 1st) 'த பினான்ஸ்' (The Finance) நிறுவன வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று (07) ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வைப்பாளர்களுக்கான அதிகபட்ச இழப்பீடாக 6 இலட்சம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள மக்கள் வங்கியின் 60 கிளைகளூடாக பணம் மீள செலுத்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Finance நிறுவனம் காணப்படக்கூடிய நகரிலுள்ள மக்கள் வங்கியின் மிக அண்மித்த கிளைகளூடாக பணம் மீள செலுத்தப்படவுள்ளது. The Finance நிறுவனத்தின் 97 வீதமான வைப்பாளர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா வரை பணம் மீள செலுத்தப்படவுள்ளது. ஏனைய 3 வீதமானவர்களுக்கான பணத்தையும் மீள செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.