டயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்

டயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 07-06-2020 | 12:20 PM
Colombo (News 1st) நுவரெலியா - டயகம தோட்டத்தில் 7 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் அனைவரும் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆணொருவரும் 6 பெண்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் பெண் ஒருவருக்கே அதிகளவில் குளவிகள் கொட்டியுள்ளதாக டயகம பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். டயகம தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்களே இன்று (07) காலை 9 மணியவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.