The Finance நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கு பணம் மீள செலுத்தப்படவுள்ளது

The Finance நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கு பணம் மீள செலுத்தப்படவுள்ளது

The Finance நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கு பணம் மீள செலுத்தப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2020 | 2:01 pm

Colombo (News 1st) The Finance நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் பணம் மீள செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள மக்கள் வங்கியின் 60 கிளைகளூடாக பணம் மீள செலுத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Finance நிறுவனத்தின் 97 வீதமான வைப்பாளர்களுக்கு தலா 06 இலட்சம் ரூபா வரை பணம் மீள செலுத்தப்படவுள்ளது.

ஏனைய மூன்று வீதமானவர்களுக்கான பணத்தையும் மீள செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்