மஸ்கெலியாவில்  11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

by Staff Writer 05-06-2020 | 5:12 PM
 Colombo (News 1st) மஸ்கெலியா - ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் 11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 08 பெண்களும் 03 ஆண்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன், அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மஸ்கெலியா - லக்கம் சீர்பாத பிரிவிலும் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இன்று இலக்கானதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.