13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

by Staff Writer 05-06-2020 | 1:55 PM
Colombo (News 1st) அம்பாறை - ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞர், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.