George Floyd; பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள்

George Floyd மரணம் ; பொலிஸ் அதிகாரிகள் மீது புதிய குற்றச்சாட்டுகள்

by Staff Writer 04-06-2020 | 9:47 AM
Colombo (News 1st) George Floyd இன் மரணம் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி Derek Chauvin மீது கொலைகள் தொடர்பான தண்டனை சட்டக்கோவையின் முதலாம் பிரிவின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பிணையின்றிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக்கு துணைபுரிந்ததாக புதிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. George Floyd மரணத்துக்கு நீதி கோரி இன்றும் அமெரிக்காவில் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.