மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று 

மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று 

by Staff Writer 04-06-2020 | 4:15 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 41 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 36 பேர் கடற்படை உறுப்பினர்களாவர். கந்தக்காடு, ஒலுவில் பகுதிகளிலுள்ள கண்காணிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனைத் தவிர, இந்தியாவில் இருந்து வருகை தந்த கடுகெலியாவ கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூவரும் பங்களாதேஷில் இருந்து வருகை தந்து, தியத்தலாவ கண்காணிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவரும் இன்று அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் அடங்குகின்றனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 03 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.