by Staff Writer 03-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) தலவாக்கலை - லிந்துலை, சென் கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்று (02) உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த பெண்ணின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
04 பிள்ளைகளின் தாயான 59 வயதான அலிமா பீபீ என்ற பெண்ணே உயிரிழந்தார்.
அவரின் ஜனாஸா சென் கூம்ஸ் தோட்ட பொது மயானத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.