பொகவந்தலாவையில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

பொகவந்தலாவையில் 3 சிறார்கள் உள்ளிட்ட ஐவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

by Staff Writer 03-06-2020 | 6:46 PM
Colombo (News 1st) பொகவந்தலாவை - கெம்பியன் ஓல்டி தோட்டத்தில் மூன்று சிறார்கள் அடங்கலாக 05 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கெம்பியன் ஓல்டி தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பகல் 2 மணியளவில் இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிறுவர் நிலையத்திற்கு அருகில் இருந்த 3 சிறார்களும் அவர்களைக் காப்பாற்ற சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓல்டி தேயிலை தோட்டத்திலிருந்த குளவிக்கூடு ஒன்று கலைந்துள்ளது.

ஏனைய செய்திகள்