புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்

புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்

by Staff Writer 03-06-2020 | 9:10 AM
Colombo (News 1st) கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியில், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும். இதனிடையே, பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கவுள்ளார்.

ஏனைய செய்திகள்