நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 03-06-2020 | 6:25 AM
Colombo (News 1st) 02/06/2020; 11.50 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய நாளில் (02) 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வைத்திய கண்காணிப்பின் கீழ் 849 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நேற்று 12 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், 823 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.