கொரோனாவால் பழங்குடியினர் பலியாகும் அபாயம் அதிகம்

கொரோனாவினால் பழங்குடியினர் உயிரிழக்கும் அபாயம் அதிகம்

by Staff Writer 03-06-2020 | 9:53 AM
Colombo (News 1st) பழங்குடி சிறுபான்மையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உயர்மட்டத்தில் காணப்படுவதாக இங்கிலாந்து பொதுச்சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தலில் வயது பிரதான பங்குவகிப்பதுடன், பால் அடிப்படையில் ஆணாகவிருப்பது மற்றுமொரு பங்காகுமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. Covid -19 ஏனைய ஆசிய, கரீபியன் மற்றும் கறுப்பினப் பழங்குடிகளுக்கு பரவும் விகிதாசாரம் வேறுபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான காரணம் தௌிவற்றதாகவே இருக்கின்றது.