வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

by Staff Writer 03-06-2020 | 8:10 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சீட்டுக்களை அச்சிடவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். 22 தேர்தல் மாட்டங்களுக்காகவும் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன. அச்சிடப்படும் வாக்குச்சீட்டுக்களை பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.