English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Jun, 2020 | 5:11 pm
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (08) தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று காலை முதல் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடிவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளைக் கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, சுகாதார அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
22 Sep, 2021 | 11:01 AM
07 Aug, 2020 | 04:33 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS