வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது 

by Staff Writer 02-06-2020 | 2:10 PM
Colombo (News 1st) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றும் நிகழ்வு சிறப்புப் பூஜைகளுடன் ஆரம்மாகியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது. நேற்று கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் சந்நிதியில் இன்று அதிகாலை சிறப்புப் பூஜை வழிபாடுகளுடன் விளக்கேற்றப்பட்டது. முன்னதாக முல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் கடற்கரைக்கான பாத யாத்திரையை நேற்று ஆரம்பித்தனர். கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் வழமையாக அதிகளவிலானவர்கள் பங்கேற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே இம்முறை சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது. 10 கிலோமீற்றர் பயணத்தின் பின்னர் கடற்கரையை அடைந்த பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தம் எடுத்து வந்தனர். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டது