by Staff Writer 02-06-2020 | 5:23 PM
Colombo (News 1st) தலவாக்கலை - லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
4 பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, கடந்த மாதம் 25 ஆம் திகதி ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.