20 வயதான இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மடகல தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff Writer 02-06-2020 | 5:16 PM
Colombo (News 1st) கண்டி - பன்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடகல தோட்டத்தில், ஆகலை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த போது அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மடகல தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பன்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்