கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு

கொரோனா: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு; 809 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

by Staff Writer 02-06-2020 | 5:10 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 12 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1643 ஆக பதிவாகியுள்ளது. இதனிடையே, 809 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.