கருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

கருவலகஸ்வெவ வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 02-06-2020 | 1:20 PM
Colombo (News 1st) புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 10 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். கடமைக்கு சமூகமளித்தபோது இன்று அதிகாலை மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபளின் சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, தம்புள்ளை - பக்கமுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி இன்று (02) முற்பகல் 9.15 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் இராணுவத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர். லுணுகலை மற்றும் ஹல்தோட்ட பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 38 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.