by Staff Writer 01-06-2020 | 7:30 PM
Colombo (News 1st) வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய் சாட்சியை உருவாக்கிய குற்றச்சாட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.