கம்பளையில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கம்பளை பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 01-06-2020 | 4:16 PM
Colombo (News 1st) கம்பளை - சில்வர்ஸ்டார் தல்பிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) காலை தோட்டதுப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் கிணற்றை மூடியிருந்த தகரத்தின் மீது ஏறிய நிலையில் தவறி வீழ்ந்துள்ளார். கம்பளை அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.