by Staff Writer 01-06-2020 | 5:40 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (01) மாலை நிறைவுபெற்றது.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாளை (02) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் 10 நாட்களாக இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.