by Staff Writer 31-05-2020 | 9:30 AM
Colombo (News 1st) கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாலமுல்ல கொலன்னாவ பகுதியில், வீடொன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை, ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை ஆகிய குற்றங்களால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (31) கொழும்பு இலக்கம் இரண்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.