இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 31-05-2020 | 6:55 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை (01) முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை வழமைபோன்று, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூன் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை, தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.