முன்னாள் ஆளுனர் மார்ஷல் பெரேரா காலமானார்

முன்னாள் ஆளுனர் மார்ஷல் பெரேரா காலமானார்

by Staff Writer 30-05-2020 | 3:20 PM
Colombo (News 1st) முன்னாள் ஆளுனரான ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார். கொழும்பில் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். மார்ஷல் பெரேரா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை ஆவார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊவா மற்றும் தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார். மறைந்த மார்ஷல் பெரேராவின் பூதவுடல் நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) மதியம் வரை கொழும்பில் தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அன்னாரின் இறுதிக்கிரியைககள் எதிர்வரும் புதன்கிழமை பதுளையில் இடம்பெறவுள்ளது.