கொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்

கொரோனா: மேலும் 27 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 30-05-2020 | 4:10 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் மேலும் 27 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1559 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளங்காணப்பட்டனர். இவர்களில் கடற்படை உறுப்பினர்கள் 17 பேரும் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த 11 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட 768 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.