கஃபூர் கட்டிடம்: கடற்படையினருக்கு தொற்றில்லை

கஃபூர் கட்டிடத்தில் இருந்த கடற்படையினருக்கு கொரோனா தொற்றில்லை

by Staff Writer 30-05-2020 | 5:52 PM
Colombo (News 1st) கொழும்பு கஃபூர் (GAFOOR) கட்டிடத்தில் இருந்த கடற்படை சிப்பாய்கள் 220 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை சிப்பாய்களின் PCR பரிசோதனை அறிக்கை இன்று கிடைத்துள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள கஃபூர் (GAFOOR) கட்டிடத்தில் கடற்படை உறுப்பினர்கள் சிலர் கடந்த 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.