சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பதிவு

சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு

by Bella Dalima 29-05-2020 | 6:33 PM
Colombo (News 1st) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜரானார்.