கொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்

கொரோனா தொற்று: 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டனர்

by Bella Dalima 29-05-2020 | 8:15 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 07 கடற்படையினரும் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்த மூவரும் அடங்குகின்றனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் 776 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 09 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.