by Staff Writer 28-05-2020 | 2:05 PM
Colombo (News 1st) ஆறு கோடி ரூபா பெறுமதியான 1900 போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக பியகம பகுதியிலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 3 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சொகுசு கார் ஒன்றுடன் மற்றொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.