வௌிநாடுகளிலிருந்து வருகைதந்த 283 பேருக்கு கொரோனா

வௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்த 283 பேருக்கு கொரோனா

by Staff Writer 27-05-2020 | 11:54 AM
Colombo (News 1st) வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்த நபர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் இதில் அடங்குவதாக இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 101 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்