by Staff Writer 27-05-2020 | 4:30 PM
Colombo (News 1st) மண்சரிவு அபாயம் மிக்க வலயங்களில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.
மழையுடனான வானிலையை முன்னிட்டு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.