தேர்தலில் ஜீவன் தொண்டமானை களமிறக்க தீர்மானம் 

பொதுத்தேர்தலில்  ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமானை களமிறக்க தீர்மானம் 

by Bella Dalima 27-05-2020 | 7:55 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானை களமிறக்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதமர், அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பதாகக் கூறியதாக பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.