தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பலத்த மழையுடனான வானிலை நிலவும்

by Staff Writer 27-05-2020 | 8:38 PM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பலத்த மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையின் ஆரம்பமாக இது அமையக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையத்தில் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொற்றுநோய் அபாயத்திற்கு மத்தியில், மழையுடான சீரற்ற வானிலையை அடுத்து ஏற்படக்கூடிய நிலை தொடர்பில் அறிவிப்பதற்கான இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.