கொரோனா தொற்று: மேலும் 20 பேர் குணமடைந்தனர் 

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் குணமடைந்தனர் 

by Staff Writer 27-05-2020 | 3:14 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 732 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 53 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் அடையாளம் காணப்பட்டனர். தொற்றுக்குள்ளான 630 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 732 கொரோனா நோயாளர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 10 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.