வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவை 

ஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் ரயில்கள் சேவையில் ஈடுபடும்

by Staff Writer 27-05-2020 | 5:45 PM
Colombo (News 1st) அலுவலக மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்கள், ஏற்கனவே வௌியிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் நாளையும் (28) சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்ததாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். கண்டி - பதுளை பகுதிகளுக்கிடையில் இரண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.