ஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு

by Staff Writer 27-05-2020 | 9:43 AM
Colombo (News 1st) நேற்றிரவு (26) 10 மணி முதல் இன்று (27) அதிகாலை 4 மணி வரையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 81 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 66,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 18,695 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.