96 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்

96 கொரோனா நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Staff Writer 26-05-2020 | 6:45 PM
Colombo (News 1st) நாட்டில் இன்று 96 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 88 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய 8 பேரும் கடற்படையினராவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது. 556 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 712 பேர் குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை கொரானா தொற்றுக்குள்ளான 10 பேர் உயிரிழந்துள்ளனர்.