by Staff Writer 26-05-2020 | 10:33 AM
Colombo (News 1st) இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 445 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 65,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 18,614 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 20,926 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.