போதைப்பொருளுடன் 343 பேர் கைது

மேல் மாகாணத்தில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது

by Staff Writer 25-05-2020 | 3:19 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (24) காலை 6 மணி முதல் இன்று (25) காலை 6 மணி வரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோயினுடன் 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.