by Staff Writer 25-05-2020 | 2:32 PM
Colombo (News 1st) ஹற்றன் - டிக்கோயா தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (25) முற்பகல் டிக்கோயா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
48 வயதான பெண் தொழிலாளி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 8 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.
குறித்த 8 பேரும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.