சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்  ​

சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​

by Chandrasekaram Chandravadani 25-05-2020 | 4:45 PM
Colombo (News 1st) தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தின் சிங்கம்பட்டி ஜமீன்தாரரான நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக் குறைவினால் தனது 92 ஆவது வயதில் நேற்று (24) காலமானார். இவரே தென்னிந்தியாவின் இறுதி ஜமீன்தார் ஆவார். அன்னாரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.