by Staff Writer 25-05-2020 | 9:21 PM
Colombo (News 1st) கத்தாரில் உள்ள இலங்கையர்கள் சிலரை நாளை (26) நாட்டிற்கு அழைத்துவரவிருந்த விமான பயணம் தற்காலிமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து நாட்டிற்கு ஏற்கனவே அழைத்துவரப்ப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது அவர்களில் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமையினால் கத்தாரிலிருந்து நாட்டிற்கு வரவிருந்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நாளை காலை 5.45 மணிக்கு கத்தாரின் டோகா நகரில் இருந்து இலங்கையர்கள் 273 பேரை ஶ்ரீலங்கன் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாட்டிற்கு வருகை தரவிருந்த இலங்கையர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வௌியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளதார்.